2025 மே 21, புதன்கிழமை

இளைஞர்களை கடத்தி தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 மார்ச் 19 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா

புத்தளம் நூர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கடத்தி தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை நாளை புதன்கிழமை வரை விளக்கமறியில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இரு இளைஞர்கள் கடந்த வாரம் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரினால் மூன்று  பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். இதன்போதே இவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .