2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

புத்தளம் -  குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளம் - குருநாகல் வீதியில் கல்லடி எனும் பிரதேசத்திலேயே  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில்  பயணித்தவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.  லுணுவில உதாசிரிகம பிரதேசத்தை சேர்ந்த (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இந்த இளைஞர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X