2025 மே 15, வியாழக்கிழமை

மாடு அறுக்குமிடம் முற்றுகை; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி, மஹாகும்புகடவல வீதியில் சட்டவிரோதமாக மாடுகள் அறுக்குமிடமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுற்றிவளைத்த முந்தல் பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைதுசெய்துள்ளனர். 

இதன்போது அறுப்பதற்கு தயாராகவிருந்த 3 மாடுகளையும் அறுக்கப்பட்ட மாடொன்றையும் 2 வாகனங்களையும்; கைப்பற்றியுள்ளதாக  முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகித் மானுமடுவின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.ஜூசந்த உள்ளிட்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .