2025 மே 14, புதன்கிழமை

தேங்காய்களை திருடிவந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டங்களிலிருந்து  திருட்டுத்தனமாக தேங்காய்களைப் பறிக்கும் சந்தேக நபர்கள் இருவரை முந்தல் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 300 தேங்காய்களையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மதுரங்குளி, குறிஞ்சிவெட்டி பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றிலிருந்து திருட்டுத்தனமாக தேங்காய் பறிக்கமுற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இடத்திற்குச் சென்று இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .