2025 மே 14, புதன்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரிற்கும் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் முதலமைச்சர் காரியாலயத்தில் தமிழ் மொழி மூல தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த பேச்சுhர்த்தையின் போது புத்தளம் மாவட்டத்தில் நீண்ட காலம் தொண்டராக கடமை புரியும் ஆசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உறுதி வழங்கியதாக மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது புத்தளம் மாவட்டத்தில் கடமை புரியும் தொண்டர் ஆசிரியர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .