Kogilavani / 2015 மார்ச் 09 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
பெல்மதுளை பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை(8) இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி மேலுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரத்தினபுரி மல்வல பிரதேசத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க கணவன் மனைவியே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
மேற்படி விபத்தில் பலியான தம்பதியரின் இரண்டு பிள்ளைகளும் மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவருமே இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து பெல்மதுளை, காவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 Dec 2025