2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.மு.இன் உறுப்பினர் கைது

Kogilavani   / 2015 மார்ச் 23 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலாபம் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரை நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.  

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பிரதேசத்தில் வைத்தே மேற்படி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, நேற்றிரவு அப்பிரிவின் பொலிஸார் சிலர், சிலாபம் கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள மீனவக் கிராமத்துக்கு  சென்றுள்ளனர்.  

இதன்போது இவர்களைச் எதிர்கொண்ட பிரதேச சபை உறுப்பினர், பொலிஸாரை அங்கிருந்தவர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்தோடு தான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என கூறியுள்ளதோடு மதுபோதையில் இருந்தவரைப் போலவும் செயற்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரை பொலிஸார் எச்சரித்த போதும் அவர் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் பொலிஸாரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர்.  இப்பரிசோதனையின் போது அவர் மதுபானம் பாவித்திருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X