Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
வீட்டுத்தோட்டமொன்றில்; கட்டப்பட்டிருந்த 75 ரூபாய் பெறுமதியான பசுமாடொன்றை இறைச்சிக்கு வெட்டியவர்களை கைதுசெய்யும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை சிலாபம், இரணவில பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது வீட்டுத்தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை யாரோ சிலர் வெட்டி இறைச்சியை கொண்டுசென்றுள்ளதாக அப்பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .