2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் இருவர் பலி

Thipaan   / 2015 ஜூன் 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் திங்கட்கிழமை(29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறி, சிலாபம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச்சென்ற லொறி சாரதியினை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X