Princiya Dixci / 2015 ஜூலை 22 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
புத்தளம், மணல்தீவு குளத்தில் குடும்பத்தாருடன் திங்கட்கிழமை (20) மாலை குளித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவனான முஹம்மது சாஜித் முஹம்மட் சறூன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், நீரில் மூழ்கியதால் இம்மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிட்டுள்ளார்.
இச்சம்பவம், தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .