Sudharshini / 2015 ஜூலை 23 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்
புத்தளம், ஏத்தாளை பகுதயில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் கல்பிட்டி வீதி குறிஞ்சிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான அமீர் முஹம்மது முஹம்மது நஸ்மி என்பவரே உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து நேற்று புதன்கிழமை(22) வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் நிகழ்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago
3 hours ago