Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல் தொடர்ந்தும் தமது வாடிக்கையாளர் தளத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தனித்துவமான சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் ஈடுபடுகிறது.
இதன் மிகவும் வலுவான சமூக பொறுப்புணர்வு முன்னெடுப்புகளுள் 2016, 2018ஆம் ஆண்டுகளுக்கிடையே தமது வாடிக்கையாளர்களுக்கு 40,000 மூக்குக் கண்ணாடிகளை பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கந்தளாயில் இடம்பெற்ற காஷ் பொனான்ஸா நிகழ்வுடன் இவ்வெண்ணிக்கை 41,000 ஆக அதிகரித்தது. மொபிடெலின் கண்மருத்துவ சிகிச்சையானது மாதாந்தம் இடம்பெறும் மொபிடெல் காஷ் பொனான்ஸா களியாட்ட நிகழ்வில் இடம்பெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுள் இந்த காஷ் பொனான்ஸா களியாட்ட நிகழ்வானது 36 இடங்களில் இடம்பெற்றுள்ளது. அந்த ஒவ்வொரு இடத்திலும் வசிக்கும் தகுதி வாய்ந்த மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு, இக்கண் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் இலவச மூக்குக் கண்ணாடிகளையும் கண்பராமரிப்பையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது கண் பார்வையையும் மேம்படுத்திக்கொண்டனர். இந்த இலவச மருத்துவ சிகிச்சையின் போது, நன்கு புகழ்பெற்ற கண்வைத்தியர்களால் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago