.jpg)
ஆயுர்வேத பிரத்தியேக பராமரிப்பு பொருட்களை தயாரிப்பதில் முன்னணியில் திகழும் சுவதேஷி மூலமாக தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக தெவுந்தர உதபலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா கோயிலுக்கு ஒளியூட்டலை மேற்கொள்ள முன்வந்திருந்தது. இந்நிகழ்வுக்கு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என பெயரிடப்பட்டிருந்ததுடன், ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான எசல திருநாள் காலப்பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அனுசரணை குறித்து சுவதேஷி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி அமரி விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில், 'இலங்கை நிறுவனம் எனும் வகையில், இலங்கையின் கலாசார விழுமியங்களை பேணி காப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த ஒளியூட்டல் மூலமாக எமது பாரம்பரிய கலாசார விழுமியங்கள் அழிவடையாமல் எதிர்கால சந்ததியினருக்கும் சென்றடையக்கூடிய நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் பல பக்தர்கள் நன்மையடைந்து வருகின்றனர்' என்றார்.
இந்த ஒளியூட்டலுக்கு பின்னர் வர்ணமயமான எமது கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் களியாட்ட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அசல் உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு ஆலயம் போர்த்துக்கேயரால் சேதமாக்கப்பட்ட பின்னர் தபுலுசென் எனும் அரசனால் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது. பௌத்த இலக்கியத்துக்கு அமைவாக, புத்தபிரான் மரணிக்கும் முன்னர் இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பை 'சக்ரா' எனும் தெய்வத்தை முன்னெடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார். சக்ரா தெய்வம் இந்த செய்பாட்டை 'உத்பலாவரண' தெய்வத்திடம் ஒப்படைத்திருந்தது. உத்பலாவரண என்பதன் அர்த்தம் 'வர்ணம் நீலம்' என்பதாகும். இது விஷ்ணு தெய்வத்தின் வர்ணமாகும். இதனால் தெவுந்தர ஆலயமானது உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு தேவா மந்திரய எனப் பெயர் பெற்றது.
சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுள்களுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது. களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் உயர் தர சவர்க்கார வகையான கொஹோம்ப ஹேர்பல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.