2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 26.2 வீதத்தால் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26.2 வீதத்தால் அதிகரித்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருந்தது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியான இரண்டாவது மாதமாக அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்திருந்ததுடன், 18048 ஆக பதிவாகியிருந்தது.

தொடர்ச்சியாக மதிப்பிழந்து வரும் இந்திய ரூபாயும் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .