2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சங்ஸ்தா சீமெந்து புதிய வர்த்தக நாம கட்டியெழுப்பல் செயற்திட்டத்தின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ள ஹோல்ச

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிர்மாணத்துறையை சேர்ந்தவர்களின் மத்தியில் அதிகளவு அபிமானத்தைப் பெற்ற வர்த்தக நாமமான சங்ஸ்தா சீமெந்து, இலங்கையர்களின் நிர்மாணத்துறையில் காணப்படும் பங்குதாரர்கள் மத்தியில் வர்த்தக நாமத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கும் வகையில், ஹோல்சிம் லங்கா மல்டிமீடியா செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.

முழுத் தேசமும் ஒன்றிணைந்து முன்னொரு போதும் இல்லாத வகையில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் சந்தர்ப்பத்தில், ண் ஹால்சிம் சங்ஸ்தா இலங்கைக்கு தனது சிறந்த வளங்களை பங்களிப்பு செய்வதற்கான சிறந்த வாய்ப்பை கொண்டுள்ளது. ஹோல்சிம் லங்கா, தனது புதிய செயற்திட்டத்தை சந்தையில் 2014 ஜனவரி 9ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் உதவி தலைவர் நலின் கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், 'இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பிரதான நுகர்வோர் உள்ளம்சங்களை இனங்காண்பதற்கு கம்பனி மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகாட்டலை பின்பற்றியிருந்தது. மேலும், முழு செயற்திட்டமும் முற்கூட்டியே பரிசோதித்து பின்னர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சரியான செய்தி பங்குதாரர்களுக்கு சென்றடையும்' என்றார்.

சீமெந்து துறையில் முன்னோடிகளாக திகழும் சங்ஸ்தா சீமெந்து, கொங்கிறீற் அமைத்தலுக்கு, சுவர்களுக்கான கற்களை பதித்தல் மற்றும் சுவர் பூச்சுக்களை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளுக்கு உகந்த அதிசிறந்த சீமெந்தாக நிபுணர்களின் மூலம் தெரிவு செய்யப்படுகிறது. ஹோல்சிம் வாடிக்கையாளர்கள் சங்ஸ்தா சீமெந்தை பயன்படுத்துவது தொடர்பில் பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்நுட்ப சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஹோல்சிம் புத்தாக்க மற்றும் ஆப்ளிகேஷன் நிலையத்தின் மூலமாக சங்ஸ்தா சீமெந்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பிரதான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுயாதீன கட்டட நிர்மாணிப்பாளர்களை இந்த வசதிகளை அனுபவிக்குமாறு ஹோல்சிம் ஊக்குவிக்கிறது.

ஹோல்சிம் (லங்கா) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிலிப்பே றிச்சர்ட் கருத்து வெளியிடுகையில், 'இலங்கையின் நிர்மாணத்துறை மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தக மற்றும் தனிநபர் சார் கட்டமைப்புகளுடன் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கையில், முக்கிய பங்களிப்பை ஹோல்சிம் வழங்குவதையிட்டு மிகவும் பெருமையடைகிறது' என்றார்.

ஹோல்சிம் இதுவரையில் மத்தளை விமான நிலையம் மற்றும் கிண்ணியா பாலம் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசத்தின் நம்பிக்கையை வென்றுள்ளது.

கடந்த தசாப்த காலத்தின் நம்பிக்கையை வென்ற சீமெந்து விநியோகத்தர் எனும் வகையில், ஹோல்சிம் மக்களின் இதயத்திலும், மனதிலும் உறுதியான இடத்தை பிடித்துள்ளது. இலங்கையில் மூன்றில் ஒரு இல்லம் ஹோல்சிம் தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் காணப்படும் சிறந்த பரிந்துரையாக இது அமைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் ஹொல்சிம் தயாரிப்புகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து விநியோகித்த கீர்த்தி நாமத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், சந்தை முன்னோடியாகவும் திகழ்கிறது. ஹொல்சிம் மூலமாக உறுதி செய்யப்பட்ட தர உத்தரவாதம் வழங்கப்படுகிறது. உற்பத்தி இடம்பெறும் வெவ்வேறு கட்டங்களில் இதன் தரம் பரிசோதிக்கப்படுவதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயர் தரம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையில், இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் மூலம் ளுடுளு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஹோல்சிம் சங்ஸ்தா சீமெந்துக்கு இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரே சீமெந்து என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .