2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
கொழும்பு பங்குச்சந்தை கடந்த வாரம் சில முக்கிய கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்திருந்ததுடன், சாதனை பெறுமதிகளையும் பதிவு செய்திருந்தது. குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த S&P SL 20 சுட்டி 4000 புள்ளிகளை கடந்த வாரம் கடந்திருந்தது. அது போலவே சந்தையின் மொத்த மூலதனவாக்கம் 3 ட்ரில்லியனை கடந்திருந்தது. முக்கிய கொடுக்கல் வாங்கலாக ஒடெல் நிறுவனத்தின் பங்குகளை சொஃப்ட்லொஜிக் நிறுவனம் கொள்வனவு செய்திருந்ததை குறிப்பிடலாம். திங்கட்கிழமை போயா விடுமுறை என்பதால் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,218.68 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4015.63 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
செப்டெம்பா 09ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 11,400,775,834 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 57,918 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 55,610 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,308 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
செவ்வாய்க்கிழமை
குறுகிய வாரம் என்பது நேர் பெறுமதிகளுடன் ஆரம்பமாகியிருந்தது. புரள்வு பெறுமதி 2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. பீபள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், சிஐசி ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகளின் மீது மொத்த பங்கு கைமாறல்கள் பதிவாகியிருந்தன. இது புரள்வு பெறுமதியில் 31 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி மற்றும் லங்கா ஐஓசி பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
 
புதன்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி, கொமர்ஷல் வங்கி மற்றும் நெஸ்லே ஆகிய பங்குகளின் விலைகள் உயர்வுடன் சுட்டிகள் நேர்பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு யூனியன் வங்கி, கெல்சி டிவலொப்மன்ட்ஸ் மற்றும் செலான் வங்கி ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிட்டிசன் டிவலப்மன்ட் வங்கி மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. ஆவுனு வோல்கர்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் நிகர பங்கு கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
 
வியாழக்கிழமை
சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்ததுடன், புரள்வு பெறுமதி 5.5 பில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. ஒடெல் பங்குகள் மீதான மொத்த கைமாறல் என்பது இதில் 49 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு என்பது பிராக் லங்கா ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், த ஃபோர்ட்ரஸ் ரிசோர்ட்ஸ், லங்கா ஐஓசி, வலிபல் பவர், நஷனல் டிவலப்மன்ட் வங்கி மற்றும் ரோயல் செரமிக்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள், ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு என்பது ரேணுகா அக்ரி ஃபுட்ஸ், பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.
 
வெள்ளிக்கிழமை
செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் செலான் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் பங்குச்சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 1.8 பில்லியன் ரூபாவை பதிவு செய்திருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹவுசிங் டிவலப்மன்ட் ஃபினான்ஸ் கோர்ப்பரேஷன் ஆகியவற்றின் மீது மொத்த பங்கு கைமாறல்கள் பதிவாகியிருந்தன. ரேணுகா அக்ரி ஃபுட்ஸ், எஃவ்எல்சி ஹோல்டிங்ஸ், பிரமல் கிளாஸ் மற்றும் ஒடெல் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டர்ளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டு கொள்வனவு என்பது லங்கா ஐஓசி மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கெல்சி, டீ ஸ்மோல்ஹோல்டர், எஸ் எம் பி லீசிங் (சாதாரண), பன்செய் றிசோர்ட்ஸ் மற்றும் பரகன் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
லங்கா சென்சரி (உரிமை), ஒரியன்ட் காமன்ட்ஸ், ஜி.எஸ்.ஃபினான்ஸ், சிட்ரஸ் லெய்ஷர் (உரிமை) மற்றும் சிங்ஹபுத்ர ஃபினான்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,100 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.68 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 214.42 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X