2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

3 வருடங்களில் உயர் பெறுமதியை நெருங்கும் கொழும்பு பங்குச்சந்தை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 வருடங்களில் பதிவாகிய உயர் பெறுமதியை அண்மித்த பெறுமதியை கொழும்பு பங்குச்சந்தை திங்கட் கிழமை பதிவு செய்திருந்தது. சுட்டிகள் நேர் பெறுமதியுடன் நிறைவடைந்திருந்தன. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியன அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. இது புரள்வு பெறுமதியில் 67 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. இது புரள்வு பெறுமதியை 2.2 பில்லியன் ரூபா எனும் கடப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கொமர்ஷல் வங்கி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீதும் காணப்பட்டது. பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் குறைந்தளவில் பதிவாகியிருந்தது.
 
வங்கி,நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது (ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் .இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) இந்ததுறை 0.66 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. டிரேட்  ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்கொன்றின் விலை 0.80 ரூபாவால் (2.94%)குறைந்து 28.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 1.10 ரூபாவால் (0.76%) குறைந்து 142.90 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. 
 
உற்பத்தித்துறை என்பது புரள்வு பெறுமதியில் இரண்டாவதாக உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்களி;ப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.14 வீதம் அதிகரித்திருந்;தது. செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (0.03%) குறைந்து 310.50 ரூபாவாக பதிவாகியிருந்தது.
 
பிரவுண் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (11.76%) குறைந்து 1.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதேவேளை எயிட்கன் ஸ்பென்ஸ் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 108.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X