Editorial / 2020 ஜூன் 02 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘Brain Busters with SLIIT பருவம் 2’ தொலைக்காட்சி புதிர் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் அண்மையில் இரத்மலானை ஸ்டெய்ன் ஸ்ரூடியோசில் இடம்பெற்றது.
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேஷினி எச். ருவன்பத்திரன வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் விலான் சந்தீவ் பண்டார கருணாரட்ன இரண்டாமிடத்தையும், கொழும்பு ஆனந்த கல்லூரியின் சொனால் ரணதுங்க மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
வெற்றியாளர்கள் அனைவருக்கும் பெறுமதி வாய்ந்த பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த மாணவர்களின் பாடசாலைகளுக்கும் பெறுமதி வாய்ந்த பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்த இறுதிப் போட்டியின் நடுவர்களாக SLIIT ஐ பிரதிநிதித்துவப்படுத்தி உதித கமகே, அசங்கி ஜயசிங்க மற்றும் கல்வி அமைச்சின் உதவி பணிப்பாளர் தர்ஷன விஜேசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago