2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியோருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப்பத்திரங்களின்றி உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிய நான்கு பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உருத்திரபுரம், பன்னங்கண்டி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் இன்றி உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றிய நான்கு பேரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார், அவர்களுக்கெதிராக வழக்குப்பதிவு செய்து இன்று திங்கட்கிழமை (22) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து, நான்கு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மணல் பறிமுதல் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .