2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘எண்ணிக்கை பிரச்சினையே திறப்பதற்கு சிக்கல்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜனவரி 16 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக் காணப்படுகின்றமையாலேயே, கிளிநொச்சி - பூநகரி கல்விக் கோட்டத்தில் மூடப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - பூநகரி கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட  கௌதாரிமுனை வித்தியாலயம், பல்லவராயன்கட்டு அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை, அத்தாய் முத்துத்தம்பி வித்தியாலயம், தம்பிராய் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், பல்லவராயன்கட்டுப் பாடசாலையை மீள இயங்க வைப்பது தொடர்பில், கடந்த ஆண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வாண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டபோது, இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்தத் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி கல்வி வலயத்தில், மூடப்பட்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கு வலயக் கல்வித் திணைக்களம் முயற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில், பல்லவராயன்கட்டுப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதாக தீர்மானிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது, அதனை அண்டிய அயற்பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை மிகக்குறைவாக காணப்படுவதுடன், இவ்வாண்டில் தரம் ஒன்றில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே காணப்படுகின்றது.

இப்பாடசாலையை ஆரம்பிக்கும் போது, அயற்பாடசாலைகளும் பாதிக்கப்படும். இப்பாடசாலையை மீள இயக்குவதில், பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. அத்துடன், இப்பிரதேசத்தில் சனத்தொகை மிகக் குறைவாகக் காணப்படுவதால், இப்பாடசாலையை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகைகளை தாமதப்படுத்தியிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .