2025 மே 08, வியாழக்கிழமை

கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் (10) உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தவிசாளரும் இன்று (12) அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X