2025 மே 09, வெள்ளிக்கிழமை

கரையொதுங்கிய நாட்டுப்படகு தொடர்பில் விசாரணை

Niroshini   / 2021 ஜூலை 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்கரை பகுதியில். நேற்று (12) மாலை, இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகொன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பதிவு இலக்கம், உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில், சிறிய உடைவுகளுடன் குறித்த நாட்டுப்படகு கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா அல்லது சட்டவிரோத கடத்தல் நடவடிக்கை;காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா என்ற கோணத்தில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X