2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற வளாகத்துக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவருக்கு சிறை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
மதுபோதையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.
 
கடந்த வியாழக்கிழமை (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, மதுபோதையில் சென்று பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் ஏசி குழப்பம் விளைவித்த ஒருவரை நீதிமன்ற கடமையில் இருந்த கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .