2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு சிறை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் மதுபோதையில் ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டியினை செலுத்திச் சென்றவருக்கு 30,000 ரூபாய் தண்டப்பணமும் ஒரு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனையும் விதித்ததுடன், சாரதியனுமதிப்பத்திரத்தை ஒரு வருட காலத்துக்கு இடைநிறுத்தி வைத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.
 
அத்துடன், கிளிநொச்சிப் பகுதியில் வீதி ஒழுங்கு விதிகளை மீறி வாகனம் செலுத்திய நான்கு பேருக்கு 12,500 ரூபாய் தண்டப்பணமும், தெளிவில்லாத சாரதியனுமதிப்பத்திரத்தை வைத்து வாகனம் செலுத்தியவருக்கு 3,000 ரூபாய் தண்டப்பணமும், முச்சக்கர வண்டியில் தவறான முறையில் முந்திச் சென்ற நபருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணம் விதித்தார்.
 
மேலும், டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றி மேற்பகுதியை மூடாது கொண்ட சென்ற நபருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .