2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னார் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், ஒரு மேலதிக வாக்குக்கால், இன்று (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கூட்டமானது, இன்று (27) காலை 10.30 மணியளவில், மன்னார் பிரதேச சபையின்  தவிசாளர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் நடைபெற்றது.

தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து, பிரதேச சபையின் செயலாளரால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கையை வாசிக்க முற்பட்ட போது,  இந்த வரவு – செலவுத் திட்ட அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதாக, மன்னார் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர், பிரேரணை ஒன்றை சபையில் கொண்டு வந்தார்.

இதை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

இதேவேளை, இந்த வரவு – செலவுத் திட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாக, தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர் முன்மொழிய, அதை  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்தார்.

இதனைத்  தொடர்ந்து, சபையின் தவிசாளரால் வரவு - செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஓர் உறுப்பினர்களுமாக மொத்தம் 11 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலா ஒருவர் வீதம் ஆதரவாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X