2025 மே 03, சனிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் குழு மோதல்; இருவர் காயம்; ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நேற்றிரவு (04) இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம மக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார், ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X