2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள்ஆரம்பித்து வைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் கிராமத்துக்குச் செல்லும் 10 கிலோமீட்டர் நீளமான பிரதான வீதியை, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கும் பணிகளை வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்;, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள புனித தெரேசா ஆலயத் திருவிழா கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதுடன் திருவிழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர், புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கு, தட்சனா மருதமடு பங்குத்தந்தை, மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய சோதி, வீதி அபிவிருத்தி திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநாதன், முள்ளிக்குளம் கிராம உத்தியோகத்தர் மற்றும் அங்குள்ள கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X