2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யானைகள் ஊருக்குள் நுழைவதாக முறைப்பாடு

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கனகராஜ்

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் நுழையும் யானைகள் நெல் மூடைகள் மற்றும் பயன்தரு மரங்களை அழித்துச் செல்வதாக பிரதேச செயலாளருக்கு அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.

மேற்படி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காப்புக்குத்தி, நயினைமடு, சின்னடம்பன், மாரா இலுப்பை மற்றும் குளவி சுட்டான் ஆகிய கிராமங்களிலே இவ்வாறு யானைகள் புகுந்து நாசம் செய்வதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி பகுதியில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், தண்ணீர் தேடி யானைகள் இரவு வேளையில் ஊர்களுக்குள் வருவதாகவும் இதனால் தாங்கள் நித்திரையின்றி தவிப்பதாகவும் மக்கள் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X