2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'மஹிந்த சிந்தனை' என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: சி.வி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். இதை விடுத்து மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக வட மாகாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

'வட மாகாண சபையில் நாம் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன' என்றும் வட மாகாண சபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும்' அவர் கூறியுள்ளார்.

வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுநர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வட மாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றோம். அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்' என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் என்னையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

அதற்கான கடிதம் ஒன்று எனக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைத்திருக்கின்றமு. இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மஹிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். (பி.பி.சி)

  Comments - 0

  • Sumathy M Sunday, 24 November 2013 11:32 PM

    ஐயா விக்னேஸ்வரன் அவர்களே யாருக்கையா பூச்சுத்துகிறீர்கள்? ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முதலமைச்சரும் மத்திய அமைச்சரும் சேர்ந்தே அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துகிறார்கள். உங்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X