2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

செம்மணியில் இதுவரை 101 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

Freelancer   / 2025 ஜூலை 26 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் உள்ள 2 மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 11 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 09 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் சனிக்கிழமை (26) அகழ்ந்து எடுக்கப்பட்ட 09 எலும்பு கூட்டு தொகுதியுடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 101 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது  என்றார்.

இதேவேளை, இந்த அகழ்வு நடடிக்கைளில் 46 சாட்சிய ஆதாரப் பொருட்கள் இதுவரை அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X