2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

உடுப்புத் துவைத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுப்புத் துவைத்துக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்த  குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுப்ரமணியம்வீதி, சுன்னாகத்தைச்  சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது 58) என்பவராவார்.

மேற்படி நபர் தாவடியில் உள்ள பாடசாலை ஒன்றில் காவலாளியாக கடமை ஆற்றுவதாகவும் நேற்று சனிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் உடுப்பு துவைத்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில்  தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணைகளை  மேற்கொண்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X