Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 27 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகுலு காசவேவா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெட்டகோலு வேவா பகுதியில் ஒரு புள்ளி மான் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.
ஜூலை 24, 2025 அன்று சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான செய்திகளில் செய்தி வெளியான பிறகு பரவலான கவனத்தை ஈர்த்த இந்த சம்பவம், விரைவான பொலிஸ் நடவடிக்கைக்கு வழிவகுத்தது. சந்தேக நபர்கள் ஜூலை 26 அன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஓகஸ்ட் 1, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சட்டம் அனைத்து தனிநபர்களுக்கும், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சமமாகப் பொருந்தும் என்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸ் திணைக்களம் இதன்போது வலியுறுத்தியது.
47 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
57 minute ago