2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் கைதான மூவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முருங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாட்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்களை ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மன்னார், முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த புதன்கிழமை  மாவீரர்தினம் என எழுதிக்கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த மூவரையும் மறுதினம்  வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது மன்னார் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த  வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார், குறித்த 3 சந்தேக நபர்களையும் தங்களுடைய தடுப்பில் வைத்து 72 மணித்தியாலங்கள் மேலதிக விசாரணைக்கு  உட்;படுத்த வேண்டும் என மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த 3 நபர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 72 மணித்தியாலங்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் குறித்த 3 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது தொடர்ந்தும் குறித்த மூன்று பேரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த மூன்று பேரையும் எதிர்வரும் 14 தினங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ அனுமதி வழங்கினார்.

குறித்த மூன்று பேரையும் எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X