2025 மே 28, புதன்கிழமை

பேருந்து தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

George   / 2014 டிசெம்பர் 06 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


மன்னாரில் உள்ள சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, புனித சவேரியார் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு முன்பாக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் பேருந்து தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (05) நாட்டப்பட்டது.

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் மன்னார் செபஸ்தியார் பேராலய உதவி பங்குத்தந்தை, மன்னார் இந்து மத குருமார்களின் தலைவர் வாசுதேவ குருக்கள், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம், பிரதி நகர முதல்வர் ஜேம்ஸ் ஜேசுதாசன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் எஸ்.ஜிப்ரி, கல்லூரிகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ் வேலைத்திட்டமானது இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X