2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மீது கல்வீச்சு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 10 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை போக்குவரத்துச் சபையின் புத்தளம் டிப்போவுக்குச் சொந்தமான உடப்பு - முல்லைத்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்மீது செவ்வாய்க்கிழமை (09) கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று உடப்பிலிருந்து முல்லைத்தீவை நோக்கிப்பயணித்த குறித்த பஸ்மீது நொச்சியாகம பிரதேசத்தில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பஸ்ஸின் சாரதியின் பக்கமுள்ள முன்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பஸ் சாரதிக்கும் சிறுகாயமேற்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .