Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 14 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய இடங்களிலுள்ள 600 ஏக்கர் வயல் நிலங்கள் தமக்கு கிடைக்காவிடில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு, மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நாடமாடும் சேவையொன்று வெள்ளிக்கிழமையும் (12) சனிக்கிழமையும்; (13) இடம்பெற்றது.
சனிக்கிழமையன்று நடைபெற்ற நடமாடும் சேவைக்கு வருகைதந்த மேற்படி மூன்று கிராமங்களையும் சார்ந்த 600 ஏக்கருக்கு சொந்தமான மக்களுக்கும் காணி ஆணையாளரின் மேலதிக செயலாளர் எல்.வி.எஸ்.வி.தயாரத்னவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த கிராம மக்கள், 'நாங்கள் காலாகாலமாக வயல் செய்துவந்த நிலங்கள் தற்போது மகாவலித்திட்டம் என்ற பெயரில் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிமையாளர்கள் நாங்கள் இருக்கும் போது மகாவலித் திட்டம் என்ற பெயரில் எவ்வாறு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது' என கேள்வி எழுப்பினர்.
'மகாவலி திட்டத்தில் தமிழர்களுக்கு காணி வழங்க முடியாதது ஏன்?. எங்களுடைய வயல் நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது எங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய இந்த விவசாய வயல் நிலங்கள் எமக்கு கிடைக்காவிட்டால் நீதி கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருப்போம்' என கூறினார்கள்.
இதற்கு பதிலளித்த மேலதிக செயலாளர், 'இது தொடர்பாக மகாவலி அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியிருக்கிறோம். நாங்கள் அவர்களுடன் நேரடியாக சந்திப்பொன்றை ஒழுங்குசெய்து ஒருமாத காலத்துக்குள் உரிய பதிலொன்றை பெற்றுத்தருகிறோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago