2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடு நீர்ப்பாசன, கழிவு வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமல் உள்ளன

Thipaan   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசன மற்றும் கழிவு வாய்க்கால்கள் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளங்களின் ஒன்றாகவும் அதிகளவு வயல் நிலங்களைக் கொண்ட ஒரு குளமாகவும் காணப்படும் இரணைமடுக் குளமும் அதன் கீழான பிரதான மற்றும் கிளை நீர்ப்பாசனக் கால்வாய்கள், கழிவு வாய்க்கால்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் அதன் கட்டுமானப் பணிகள் சிதைவடைந்து காணப்படுகின்றன.

இதனால் பயிர் செய்கை காலங்களில் பெருமளவு நீர் விரயமாகியும் வருகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் இந்த குளத்தின் நீப்பாசன வாய்க்கால்கள் பகுதி பகுதியாக புனரமைக்கப்பட்டு வருகின்ற போதும் இன்னமும் ஏராளமான வாய்க்கால்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதுடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால் நீர் விரயமும் தொடர்ந்து காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X