Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 19 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், பஸார் பகுதியிலுள்ள 'சதொச' விற்பனை நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (18) மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர் குழுவினர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இங்கு பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது, மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகுதி உணவுப் பொருட்களை மீட்டகப்பட்டதோடு எலி நடமாட்டத்தினால் குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர் கேடுகள் தொடர்பில் அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
அத்துடன், குறித்த சதோசா விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத்துக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை மன்னார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, மன்னார், பஸார் பகுதியிலுள்ள பிரபலமான மூன்று உணவகங்களை மூடுமாறு நேற்று வியாழக்கிழமை (18) மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள நான்கு (4) வர்த்தக நிலைங்களில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவு விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குறித்த உணவகங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மன்னார் நீதிமன்றம் ஏற்கெனவே கால அவகாசம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் இந்த 04 வர்த்தக நிலையங்களும் நேற்று வியாழக்கிழமை (18) மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த உணவங்களுக்கும் எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகளும் நேற்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த உணவகங்களில் ஒரு உணவகம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தனது உணவகத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ததோடு குறித்த உணவகத்தின் உரிமையாளர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அதேவேளை ஏனைய 03 உணவக உரிமையாளர்களில் இருவர் தமது உணவகத்தின் குறையாடுகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையிலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக மன்றில் நேற்று ஆஐராகியிருந்தனர்.
மற்றைய ஒரு உணவகத்தின் உரிமையாளர் தனது உணவகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத நிலையில் தனது உணவகத்தில் கடமையாற்றுகின்ற பனியாளரை மன்னார் நீதிமன்றததுக்கு அனுப்பியிருந்தார்.
இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் தமது வர்த்தக நிலையங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத குறித்த 3 வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிட்டார்;.
இதற்கமைவாக குறித்த வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மூட நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த 3 வர்த்தக நிலையங்களில் ஒன்றை எதிர்வரும் 21ஆம் திகதி 7ஆம் மாதம் இரண்டாவது வர்த்தக நிலையத்தை 08ஆம் திகதி 09ஆம் மாதம் வரையும் 3ஆவது வர்த்தக நிலையத்தை 30ஆம் திகதி 7ஆம் மாதம் வரையும் மூடுமாறும், நீதிமன்றத்தில் ஆஜரான 02 உணவக நிலையங்களின் உரிiமாயளர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரித பினையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
ஒரு உணவகத்தின் உரிமையாளர் நீதிமன்றத்திற்கு நேற்று வியாழக்கிழமை (18) சமூகமளிக்காததன் காரணத்தினால் குறித்த உணவக உரிமையாளரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago