Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 21 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
யாழ்ப்பாணம், வலி.வடக்கு மற்றும் கிழக்கில் 200 ஏக்கர் மீள் கையளிக்கும்போது அதிகாரிகள் சில பகுதிகளை மாத்திரம் விடுவிப்பதால் மக்கள் சுபீட்சமாக வாழ முடியவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் 44 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை (20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இலங்கையில் சமாதானத்தை நிறுவி பெரும் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டவருவதே எமது அவா. தேர்தல் ஜனவரி மாதம் இடம்பெற்று முடிந்திருந்தாலும் பெப்ரவரி மாதத்தில் இருந்தே எமது பணிகள் ஆரம்பிக்க தொடங்கின. இந்த காலத்தில் எமது அரசாங்கம் சமுதாயத்திற்கு பல நன்மையான காரியங்களை செய்திருக்கின்றன.
ஆனால், மக்களிடத்தில் அதனை உணரமுடியாதுள்ளது. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஏனெனில் ஐந்து மாதம் மாத்திரமே கடந்துள்ளமையால் அவ்வாறு ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பார்க்கும்போது எமது இலங்கை தேசம் பல பிரச்சினைகளை ஏதிர்கொண்டுள்ளது.
முன்பிருந்த அரசாங்கங்கள் பல பிழையான செயல்களை செய்து எமது பொருளாதாரத்தை கேவலமான நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள். எனவே, நாம் இனி எமக்கு மண்ணே எவ்வாறு பெருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே சவாலாக உள்ளது.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தன. இதனை தீர்ப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சில வேளைகளில் இவ்வாறான நல்ல செயற்பாடுகளை அழுல் செய்வதற்கு எமக்கு சில வேளைகளில் உண்மையான ஆதரவு இல்லை என்பதனையும் நான் செல்ல விரும்புகின்றேன். அரசாங்க தரப்பில் பார்க்கும்போது அரசாங்க காரியதரிசிகள் சிலர் ஒத்துழைப்பை கொடுக்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என் தெரியவில்லை. பிரதமரை நான் சந்திக்கும்போது இது தொடாபில் தெரிவித்திருக்கின்றேன்.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய சில கச்சோரிகளிலும் அரசாங்க அதிபர்கள் மக்களோடு ஒத்துழைத்து மக்களுக்கு தேவையான சேவைகளை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையாக நடக்கவில்லை என்றே தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறான பிழையான காரியங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் அவ்விடயத்தை உடனடியாக எனக்கு அறிவியுங்கள் என்பதே எனது கோரிக்கை. அதற்கு ஏற்றவகையில் கடமையை செய்து வாருங்கள்.
வட மாகாணத்தில் விவசாயிகள், மீனவர்கள் என பல தரப்பட்டவாகள் இருக்கின்றார்கள். அவர்களுடைய காணிகளையெல்லாம் அரசாங்கம் அபகரித்துள்ளார்கள். அது போரிலே இருக்கும் தளபதிகளுக்காக அந்த நிலங்கைள எடுத்திருக்கின்றார்கள். இக் காணிகளை மீள் எடுப்பதற்கு பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றேன். அவை உடனடியாக கிடைக்கும் என நான் கூற விரும்பவில்லை.
தற்போத 1,000 எக்கா நிலமே விடுவிக்கப்பட்டுள்ளது. சம்பூரிலும் இன்னும் 1,000 ஏக்கர் காணி கிடைக்க இருக்கின்றது. ஜனாதிபரி சம்பூர் காணிகளுக்கு செய்யவேண்டியவற்றை சட்டரீதியாக செய்திருக்கின்றார். ஜூலை மாதம் 10ஆம் திகதி அவ் வழக்கு வரும் போது நாம் எமது பத்திரத்தை கையளித்து அதிகாரத்தின் உத்தரவையும் பெறுவோம்.
இவ்வாறான பல பிரச்சனைகள் எமது சமுதாயத்திற்கு எதிர்ப்பில் இருக்கின்றன. வட மாகாணத்தில் வலிகாமம் வடக்கு வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளை கொடுக்கும்போதும் அதிகாரிகள் 200 ஏக்ககர் கொடுத்தால் அதில் ஓர் பகுதியைத்தான் கொடுக்கின்றார்கள். ஏனைய பகுதியை கொடுக்காமல் இருக்கின்றார்கள்.
ஆகவே, மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கான சூழல் இல்லை என்றே கூறவிரும்புகின்றேன். அந்த பிரச்சனைகளை தீர்க்கவேண்டியது எனது கடமை. இதனை ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் கூறியிருக்கின்றேன். அவர்களம் தமிழர்களுக்கு உதவிகைள செய்யவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றார்கள்' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago