Editorial / 2018 ஜனவரி 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலத்தை உணர்த்துபவன் காலன். மனிதன் உயிர் பிரிந்த பின்னர்தான், அவன் இறப்பின் வலியை உணர்கின்றான். அதாவது தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உற்றார், உறவினர்களின் மரணம் மூலம் துன்பத்தின் அதியுச்ச நிலையைத் தெரிந்து கொள்கின்றான்.
ஆனால், இந்த உணர்வு கொஞ்ச நாளில் மரணம் என்பதை மறந்து அது தமக்கு வராதது போல் நடந்துகொள்கின்றார்கள்.
“உனது காலம் கரைந்து செல்கின்றது. நான் வந்து உன்னை மீட்பேன். அப்போது உனக்குள்ள உலக உறவைத் துண்டித்தவனாவேன். மனிதனைத் துன்பங்களில் இருந்து மீட்கும் பணி என்னுடையதுதான். வழங்கப்பட்ட காலம் முடிவதற்குள் முடிந்தவரை உலக நிலையாமையை உணர்ந்து, உன்னை நீ உருவாக்கு; அதனால், இந்தப் புவனி, நலன் பெறட்டும். இதுதான் இறைவன் ஆன்மாக்களுக்கு விடுக்கும் வேண்டுகோளுமாகும்.
வாழ்க்கையின் உண்மையை உணர்ந்தவனுக்கு மரணம் பயமுறுத்தும் ஒரு விடயமேயல்ல.
வாழ்வியல் தரிசனம் 24/01/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
34 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
8 hours ago