2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

எவரையும் தாழ்த்த நினைப்பவர் தாழ்ந்து போவார்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் மானம் பற்றி அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். சற்று அவர்களைப் பற்றி அவதானித்தால் அவர்களிடம் ஒன்றுமே இருப்பதாகத் தெரியாது.  

எந்தவொரு நல்லவருமே தன்னைப் பற்றி சுயபிரகடனம் செய்வதில்லை. அவரது நல்ல சேவைகளே அவருக்குரிய கீர்த்திகளை ஈட்டித்தரும்.  

இன்று கௌரவம் பற்றிப் பேசுபவர்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லாது விடின் தான் உயர்குடியில் பிறந்தவன் என்று பெருமையும் சொல்லிக் கொள்வார்கள். 

இவர்கள் விரும்பி ஒரு பிறப்பை எடுக்க முடியாது. எனவே, சபை நடுவே தாங்கள் ஆற்றிய சேவைகள், பிறருக்குச் செய்த உதவிகளைச் சொல்ல இயலாது தங்கள் குலப்பெருமையை மட்டும் சொல்வது நியாயமா? 

தவறான செயலைச் செய்துவிட்டு அதை மறைக்க அர்த்தமற்ற கற்பனையுடனான விதண்டா வாதங்களை, சாதிப்பெருமைகளை முன்வைப்பது மானம் கெட்ட செயல்தான். 

இந்த உலகம் பெரியது. அதனை விடப் பெரியதாக எமது எண்ணங்களை விரித்து வைப்போம். எவரையும் தாழ்த்த நினைப்பவர் தாழ்ந்து போவார். 

வாழ்வியல் தரிசனம் 11/08/2016

-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .