Editorial / 2018 ஜனவரி 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவரிடம் சென்று பணம் அல்லது ஏதாவது பொருள் உதவிகளைப் பெற்றால், அவர்களை அறியாமலே ஒரு கூச்ச உணர்வுவந்து விடுகின்றது.
மேலும், கடன்கொடுத்தவர் அல்லது இலவசமாக உதவி செய்தவர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவராகவோ அல்லது நடத்தைகளில் மிகவும் மோசமான பேர்வழியாக இருந்தால், அவர்கள் செய்யும் இம்சைகள், உதவி பெற்றவர்களுக்குப் பெருத்த மன உழைச்சலைக் கொடுக்கும்.
இரத்தல் ஒரு சிரமமான வேதனையை உண்டுபண்ணும். ஆயினும் சிலருக்கு இரத்தல் ஒரு பொருட்டே அல்ல; கடன்பெறுதலே உடன்பலன்தரும்; உழைப்பதைவிட இது சிரமமற்றது எனச் சிரம்தாழ்த்திப் பெறுவது சுதந்திர உணர்வற்ற கோழைத்தனம் என, இத்தகையோர் உணர்வதுமில்லை.
நல்ல மனிதர்களிடம் மட்டும் உண்மையான பிரச்சினைகளைச் சொல்லி, பணஉதவி பெறலாம். அதை மீளச்செலுத்தினால் அதுவே சிறப்பு.
வாழ்வியல் தரிசனம் 09/01/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025