Princiya Dixci / 2017 ஜனவரி 02 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முரண்பாட்டுக் கொள்கைகளை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளமுடியாது. பலர் கூறுவது எல்லாமே நியாயமும் ஆகாது. சிலர் பேசும் முறையில் எமக்கு ஒத்துவராது விடினும், அதனை ஏன் நாங்கள் மீள் பரிசோதனை செய்யகூடாது என எண்ணுதல் நல்லது.
முரண்பாட்டுக் கொள்கைகள் பல உண்மைகளைத் திறந்து கொள்கின்றது. நீங்கள் எல்லோரும் எது எதனை உண்மை என நம்புகின்றீர்களோ அவை மெத்தப்பிழையாக ஏன் இருக்கமுடியாது? உண்மைக்குள் பொய் புகுந்திடாது. பொய்க்குள்ளும் உண்மையில்லை.
முரண்பாடுகளை உடன்பாடாக ஏற்கும் மனப்பக்குவத்தை ஏற்பது கடினம்தான். ஆனால் எது சரி, எது பிழை? என்று உணர நாம் ஒரு வழியால் மட்டுமே சிந்திகலாகாது.
மாற்றுவழிகளில் சிந்தனைகளை ஏற்றுக. புதியன பிறக்க இது வழிகோலும். இதற்கு நிதானம் அவசியம்.
வாழ்வியல் தரிசனம் 02/01/2017
பருத்தியூர் பால – வயிரவநாதன்
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026