Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று எம்மவர்கள் தங்களுடைய பழைய உறவினர்களை மறந்து வெளிநாடுகளில் வாழ்வதனால் தமது பாரம்பரியமான பழக்க வழக்கங்களை மறந்து போய் விட்டனர். எமது உணவு முறைகளைக் கூடத் தெரியாமல் வாழும் இளம் தலைமுறையினர் அங்கு இருக்கின்றார்கள். இந்த வாழ்க்கை முறைக்கு பெற்றோரே காரணமாகின்றார்கள்.
மேலைத்தேய கலாசாரங்களுடன் இரண்டறக் கலந்துவிட்டாலும் வேரை மறந்து மரம் வளர்வது போல் நடக்கலாமா?
என்றோ ஒருநாள் சொந்த மண்ணை ஸ்பரிசிக்கும் போது, அதன் தொன்மைப் பாரம்பரியத்தை உணர்ந்தேயாக வேண்டும். விலகி வாழ்வதால் நல்லதைப் பெற முடியாது. பிரிந்து வாழ்ந்தால் உறவின் பெருமை தெரியாமலே போய்விடும். தனது தாய் மொழியைப் பேசாமலே இருப்பது தன்னை இழந்து விடுவது போலாகும்.
தமது தாய் மண்ணில் தடம் பதிக்க ஏது தயக்கம்? எங்குமே புகழ் சேர்த்து வாழலாம். இங்கு வந்து உங்களைப் புதுப்பித்தல் நன்று அன்றோ!
வாழ்வியல் தரிசனம் 12/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
34 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago