2025 ஜூன் 09, திங்கட்கிழமை

காதலை காதலித்துப் பார்...!

Menaka Mookandi   / 2014 நவம்பர் 14 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

காதல் என்றவுடன் கண்களை விழித்து கொண்டு என்னவென்று கேட்பவர்களும், கண்களை மூடி தங்கள் காதல் துணையை நினைத்து கனவு காண்பவர்களும் நிச்சயம் இருப்பார்கள். காதல் என்ற அர்த்தத்திற்கு கவிஞர், அறிஞர்கள், ஞானிகள் பலவிதமான கருத்துக்களை கூறினாலும், நிஜத்தில் காதல் என்னும் போது 'அவ என்ர ஆள்' 'அவர் என்ர ஆள்' இது தான் காதல்.

'என்ர ஆள்' என்று சொல்வதில் தான் அவர்களின் காதல் முன்னிலையில் நிற்கின்றது. மாறாக நான் ஏன் அவனை அல்லது அவளை காதலிக்கின்றேன். கைப்பிடிப்பேனா? மாட்டேனா? காதல் என்று நான் என்ன செய்கின்றேன் என்பது அவர்களுக்கு தெரியாது. விளக்கம் கேட்டால், அலட்டவே செய்வார்கள். ஏன்டா சாமி கேட்டோம் என்ற நிலைகூட எமக்குள் ஏற்படும்.

அழகான பெண்கள் மீது ஆண்களுக்கு பொதுவாக காதல் பிறக்கின்றது. அப்போது அழகில்லா பெண்கள்?. அவர்கள் படிக்கின்றனர், முன்னேறுகின்றனர். மாறாக பெண்கள் காதலில் அன்புக்கு அடிமையாகின்றனர். பெண் என்ற இலக்கணத்திற்கு ஒப்பானவள் தன் காதல் துணையிடம் இருந்து அன்பை மட்டும் எப்போதும் எதிர்பார்க்கின்றாள். தன் காதலனிடமிருந்து அன்பை பெறுவதற்காக எத்தனையோ செய்கின்றாள். காதலின் அன்பை பெறுவதற்கு தன்னை அவனிடம் இழக்கும் அளவுக்கு பெண்கள் தயாராகின்றனர்.

நூறு பெண்களில் இரண்டு மூன்று பெண்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும், எஞ்சியவர்கள், தங்கள் காதலனுக்காக உண்மையாக இருக்கின்றனர். பெண்கள் எப்போதும் அன்பை எதிர்பார்ப்பவர்கள். இந்த இயல்பு ஆண்களை அவர்கள் மீது அன்பு காட்டுவதற்கு தூண்டுகின்றது. இந்நிலையில், ஆண், தான் காதலிக்கும் பெண்ணின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்துவிடுகின்றான்.

இவ்வாறு தங்களை தங்கள் துணைக்காக அர்ப்பணித்து வாழ்பவர்கள் திருமணத்தின் பின்பும் சிறப்பாக வாழ்கின்றனர். அந்த அந்நியோன்னியம் அவர்களின் வாழ்க்கை சிறக்கவும் வழிவகுக்கின்றது.

பாடசாலை காலத்தில் காதல்கள் பிறக்கும். அந்த காதல் ஈர்ப்பினால் ஏற்படும் காதல். இந்த காதல் சிறுபிள்ளைத்தனமான காதல் என்பார்கள். அடிக்கடி சண்டைகள், தினமும் பார்க்க வேண்டும், தினமும் கதைக்க வேண்டும் என இந்த காதல் சொல்லும். பாடசாலை காதலில் பெற்றோர்களே காதலர்களின் எதிரிகளாவர். உண்மையில் பெற்றோர்கள் எதிரிகள் இல்லை.

அவர்களின் அந்த சிறுவயது உணர்வுகள் பெற்றோரை எதிரியாக பார்க்க வைக்கின்றது. பாடசாலை காதல் கடைசி வரையில் நிலைப்பது அவரவர் நிதானம் மற்றும் புரிந்துணர்விலேயே. மாறாக பெரும்பாலான பாடசாலை காதல்கள் இடையிலே முறிந்து பாடசாலை காலம் முடிவடைய மூட்டை கட்டப்படுகின்றன.

இதற்கு விஞ்ஞானத்தில் ஹோமோன் அதிகம் சுரப்பதால் ஏற்படும் ஒரு வகை ஈர்ப்பு என்பார்கள். 20 வயதுக்கு மேற்பட்ட வயதில் உருவாக்கும் காதல் பெரும்பாலும் வெற்றியடைகின்றது. வெற்றியடைவது காதலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

காதல் எந்த வயதில் வந்தால் என்ன? காதலை திருமணம் வரை கொண்டு சென்று வெற்றியடைவதே காதலின் வெற்றி என்று கூறமுடியாது. அதற்கு பின்னரும் சிறப்பாக வாழ்ந்து நீதிமன்ற படிகள் ஏறாமல் இருந்தாலே அது சிறப்பான காதல்.

யாழ்ப்பாண காதல் கொஞ்சம் வித்தியாசமானது. யாழ்ப்பாணத்தில் காணப்படும் சமூக கட்டுப்பாடுகள் யாழ்ப்பாண காதலர்களுக்கு எதிரிகள் எனக் கூறலாம். ஆனால் சமூக கட்டுப்பாடே காதலர்களின் கட்டுப்பாடு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் காதலர்கள் சந்திப்பது என்பது ஆலயத்திருவிழாக்கள் உள்ளிட்ட பொது இடங்களிலேயே. தென்னிலங்கையிலுள்ள காதலர்களைப் போல வீதிகள், பொது இடங்களில் கைகோர்த்தபடி செல்லும் தைரியம் யாழ்ப்பாண காதலர்களுக்கு இல்லை.

யாழ்ப்பாண காதல் சாதி, மதம், பார்த்து உருவாகின்றது. இல்லையென்று எவரும் கூறமுடியாது. இவளை எனக்கு பிடித்திருக்கின்றது என உணரும் ஒரு ஆண், அவளின் நண்பிகள் மூலமாக அவளது சாதி தொடர்பில் அறிந்துகொள்கின்றான். அதன் பிறகே தனது காதலை வெளிப்படுத்துகின்றான். அதேபோல தான் பெண்களும் சாதி பார்த்தே காதல் செய்கின்றனர். சாதி பார்க்காமல் காதலிப்பவர்கள் சொற்ப அளவினரே.

சாதி பார்ப்பதன் முக்கிய நோக்கம். திருமணத்துக்கு பெற்றோர்களின் சம்மதங்களை பெறுவதற்கே. இருந்தும் சாதி பார்த்து காதலிக்கும் பலர் திருமணம் வரையில் செல்வதில்லை. என்னய்யா எல்லாம் பார்த்து காதலித்தால் உண்மைக் காதலா என கேள்வி கேட்பீர்கள். இதற்கான பதிலை யாழ்ப்பாண காதலர்களிடம் கேட்டால் இரண்டு புத்தகங்களை வெளியிடும் அளவுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

காதலில் தேவைப்படுவது. அன்பு, பரிசம், சிறிது ஊடல். இது எவராலும் மறுக்க முடியாது. ஆனால், காதல் வயப்பட்டு அடுத்து நாளே ஊடல் செய்துகொள்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்களது காதல் சில காலங்களே நிலைக்கும். அட இவ்வளவு தானா என்ற எண்ணம் இருவர் மனங்களிலும் உதித்துவிடும்.

பிறகு என்ன, விரிசல்கள் உருவாகி அது இணைய முடியாதளவுக்கு பெரிதாகிவிடும்.
ஊடல் இருக்கத்தான் வேண்டும். அதற்கு எல்லை மீறக்கூடாது. திருமணம் வரையில் பொறுமையாக இருக்கும் காதலர்கள் இன்று சமூகத்தில் இல்லை. காரணம் எல்லாம் சுருங்கி இலகுவாகிவிட்டது. தொலைத்தொடர்பு சாதனங்கள் இதற்கு காரணமாகின்றன.

தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக காதலர்கள் காதலை பரிமாறிக்கொள்வதுடன், தங்கள் உணர்வுகளையும் பரிமாறிக்கொள்கின்றனர். இது எந்தளவுக்கு நன்மை தீமை என்று தெரியாவிட்டாலும் அது ஒரு பொருந்தத்தகாத செயலாகும்.

கண்களால் வருடிய காதல் வயிற்றை நிரப்பி பிரச்சினைகளை கொண்டு வரக்கூடாது. மாறாக கண்களால் வருடிய காதல், அன்பு, பரிசம் என்ற ரீதியில் நீண்டு திருமணம் என்னும் மேடையில் ஏறி, சிறப்பானதாக வாழ்ந்து அனைவரது பாராட்டுதலையும் பெறவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காதலர்கள் அவ்வாறு செய்தார்கள், இவ்வாறு நடந்துகொண்டார்கள், வீதிகளில் நாய்கள் போல செய்கின்றனர், அந்த மறைவுக்குள் என்னமோ நடக்கின்றது என செய்திகள் வருகின்றன. இவற்றை வைத்து காதலர்கள் இவ்வாறும் நடந்துகொள்கின்றார்களே என்று நீங்கள் கேள்விகள் கேட்கலாம்.

நான் அவர்களை காதலர்கள் என்று கூறமாட்டேன். காதலர்கள் அவ்வாறு மற்றவர்கள் முகஞ்சுழிக்க நடந்துகொள்ள மாட்டார்கள். காதலர்கள் என்பவர்கள் வரையறை கொண்டவர்கள். பொது இடத்தில் காதலியின் கேசம் குழம்பியிருந்தால் அதனை சரி செய்பவனும், காதலியின் பொட்டை சரி செய்பவனும் தான் உண்மையான காதலன். மாறாக அவள் அங்கங்களை தொட்டு பார்க்க நினைப்பவன் காதலன் அல்ல.

காதல் செய்பவர்கள் அவ்வாறு நடந்துகொள்ளவே மாட்டார்கள். காமத்தை காதல் என்று கூறி செய்பவர்களே அவ்வாறு நடந்துகொள்வார்கள். காதலை காமத்துடன் குழப்பி அதனை மாற்றுவழிகளுக்கு கொண்டு சென்று காதலுக்கு கெட்ட பெயர்களை ஏற்படுத்தாதீர்கள்.

காதல் போற்றத்தக்கது. எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் ஏற்று பரஸ்பரம் அன்பு, பரிசம் செலுத்தி உண்மையான ஆத்மார்த்தமான உணர்வை தேடுவதே காதல். காதலுக்கு 'மோதி விலாசம்' முக்கியமானது. மோதிவிலாசம் என்பது அன்புடன் கூடிய அறிவு. அன்புடன் அறிவுத்தனமாக நடந்தால் அது காதலின் வெற்றி. காதலிப்போம், காதலை ரசிப்போம், காதலை உணர்வோம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5