Mayu / 2024 ஜனவரி 15 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுவாக வெளிநாடுகளில் நாம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சம்பவங்கள் அரங்கேறும். இப்படியெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமா என நம்மை கேள்வி கேட்க வைக்கும்.
அப்படியொரு வினோதமான சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. 30 கொள்ளு பேரக் குழந்தைகளுடன் 112 வயதில் இருக்கும் சிதி ஹவா ஹுசின் என்ற மூதாட்டி தனது மறுமணத்திற்
மணமகன் தேவை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கைகயில், "எனது முன்னாள் கணவர்களில் சிலர் உயிரிழந்து விட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாவில்தான் இந்த மூதாட்டி வசித்து வரும் நிலையில் இவர் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் கூட மணமகன்தான் கிடைக்கவில்லை என வேதனையில் தவித்து வருகிறார்.
மேலும், வயது முதிர்வால் இவருக்கு மறதி சற்று அதிகரித்துவிட்டது. இருந்த போதிலும், இப்போதும் கூட மலேசிய வரலாற்றில் எப்போது என்ன சம்பவம் நடந்தது என்பதைத்
துல்லியமாக அவர் கூறுகிறார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago