Kogilavani / 2011 மார்ச் 21 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
400 இறாத்தல் நிறையுடைய சுமோ மல்யுத்த வீரரொருவர் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கெலி ஜினெய்டிங் எனற மல்யுத்த வீரர் பங்குபற்றி 9 மணித்தியாலம் 48 நிமிடங்கள் 52 விநாடிகளில் தனது ஓட்டத்தை ஓடி முடித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு 270 இறாத்தல் எடை கொண்ட ஒருவர் , 11 மணித்தியாலங்கள், 52 நிமிடங்கள், 11 விநாடிகளில் ஓடி நிலைநாட்டிய சாதனையை ஜினெய்டிங் முறியடித்துள்ளார்.
ஜினைடய்டிங் முதல் 8 மைல்களை ஜோக்கிங் செய்தார் இறுதி 18 மைல்களை அவர் நடந்து கடந்தார்.
கடும் மழை மற்றும் காற்றுக்கு மத்தியிலும் அவர் 26.2 மைல் தூரத்தை ஓடி முடித்தார்.
' இறுதி 5 மைல்களில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் ' நான் தவழ்ந்து போக நேரிட்டாலும் அதை செய்ய வேண்டும்' என உறுதியெடுத்துக்கொண்டேன்' என்கிறார் ஜினெய்டிங்.
38 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
53 minute ago
2 hours ago