Kogilavani / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
வளர்ப்புப் பிராணிகள் மீது அதீத பிரியம் கொண்ட நபர் ஒருவர் தான் வளர்த்து வரும் ஆடுகள் வசிப்பதற்காக 10 அடி உயர கோபுரம் ஒன்றை அமைத்துள்ளார்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சார்ள்ஸ் பேக் (வயது 55) என்ற நபர், தமது ஆடுகள் அவற்றின் இயற்கையான மலைப்பாங்கான வசிப்பிடத்தை இழந்துவிட்டதால் அவற்றுக்கு தனது வீட்டுத் தோட்டத்தில் செயற்கை 'மலை' ஒன்றை அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்ததாக கூறுகிறார்.
'ஆடுகள் வளர்க்கும் பலர் தமது ஆடுகனை உயரமான இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பத்றகு தயங்குகின்றனர். ஆனால், அவ்வாறு அனுமதிப்பது அவசியம் என நான் கருதுகிறேன். ஆடுகள் உயரமான இடங்களை விரும்புகின்றன' சார்ள்ஸ் பேக் கூறியுள்ளார்.
இதனை மக்கள் வேடிக்கையாகக் கருதுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago