2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மயிலை வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த நபர்

Kogilavani   / 2013 மே 14 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலொன்றை வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இல்லினாய்ஸை சேர்ந்த டேவிட் பெக்மேன் என்ற 64 வயது நபரே இத்தகைய குற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மிருகவதை சட்டத்தின் கீழ் பொலிஸார் இவர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இவர் தனது வீட்டு வளாகத்தில் வளர்த்து வந்த பில் என்ற மயிலையே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதுதவிர இவர் மீது மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் பொலிஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X