R.Tharaniya / 2025 மே 05 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் கோவில் இறங்குத்துறைக்கு கண்காணிப்பு பயணமொன்றை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்கொண்டிருந்தார்.
மக்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டுஅறிந்தார் .
இதன்போது பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக அது இல்லை எனவும் சுட்டிக்காட்டிய மக்கள், இதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இறங்குத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்குரிய ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .